செவ்வாய், 16 நவம்பர், 2010

கல்யாண விபச்சார கலாசாரம்















கலாசாரம் என்பது வெறும் கல்யாணத்தை அடிப்படையாக கொண்டது போலவும் ....கலாசாரம் அழுகிய தக்காளி போல கெட்டு போய் விட்டாதாகவும் வலையுலகில் சில கலாச்சாரவாதிகள்   குதிக்கின்றனர்.

இந்திய கலாச்சாரம்  என்பது முற்றிலும் வேறானது.நான் கலாச்சாரதிற்கு,ஒழுக்கத்திற்கு   எதிரானவன் அல்ல.
கல்யாணம் ,குடும்பம் என்பது அதில் ஒரு அங்கம் தான்.

கலாசாரம் கெட காரணமாக இருப்பதாக கூறப்படும்     லிவிங் டுகெதர் பற்றி விரிவாக இன்னொரு நாள்  விவாதிக்கலாம்.

கல்யாணம் என்ற விபச்சாரத்தை பற்றி பேசுவோம்.
சரியான விதத்தில் கட்டமைக்க பட்ட விபச்சாரத்தின் மறு பெயர் தான் கல்யாணம்.
விபசாரிக்கு ஒரு நைட் -க்கு விலை பேசினால் அவள் ஒரு குறிப்பிட்ட பணத்தை எதிர்பார்ப்பாள்.
கல்யாணத்தில் மனைவி கணவனின் சம்பாத்தியத்தை எதிர்பார்ப்பாள்.
அதே போல் ஆண் கல்யாணம் ,விபச்சாரம் இரண்டிலும் பெண்ணிடம் அழகை முக்கியமாக எதிர் பார்பான்.
இது அடிப்படையான எதிர்பார்ப்பு .இன்னும் etc ..உண்டு .   

கல்யாணம்  என்பது அன்பை அடிப்படையாக கொண்டது அல்ல.வியபாரத்தை அடிப்படையாக கொண்டது.
பொதுவாக கல்யாணம் எப்படி நிர்ணயிக்க படுகிறது?

தற்போது தமிழ் விபச்சார(கல்யாண) மாலை என்று சைட் உள்ளது அனைவருக்கும் தெரியும்.
இதில் ஒரு தரப்பு  விபச்சாரிகள்(மண மகள்)  என்ன எதிர் பார்க்கிரார்கள் என்றால்....விபசாரன்(மண மகன்)  USA ,UK -வில்  இருக்க வேண்டும் என்றும்...அப்புறம் அவர்கள் குலம்,மலம் சரியாக பொருந்தி வர வேண்டும் என்று பார்க்கிரார்கள் .இது போல பல தரப்பு எதிர்பார்ப்புகள் உண்டு ....!!!

அமெரிக்காவிற்கும் அன்புக்கும் என்னய்யா  சம்பந்தம் ....?
அடிப்படையில் அன்பால் யாரும் பிணைக்க படவில்லை,கல்யாணத்திலும் சரி ...விபச்சாரதிலும் சரி... அதனால் தான் விவாகரத்து அதிகரித்து விட்டது...

எனக்கு கல்யாணத்தின் மீதும் மரியாதை இல்லை ... விபச்சாரத்தின் மீதும் மரியாதை இல்லை ....எதாக இருப்பினும் அன்பினால் உறவுகள் பிணைக்க பட்டால் மதிக்கிறேன்.

கல்யாணம் ,விபச்சாரம் இரண்டுமே சொறி நாய் சாதி தான் ....இதில் எதை அடித்து விரட்டுவது ?எதை அணைத்து கொள்வது ...? பாவம் நாய்கள் .....வைத்தியம் தான் பார்க்க வேண்டும் ....!!!

நாம சொன்னா எந்த நாய் கேக்க போகுது ? இரண்டு சொறி நாய்களும் லொள் ,லொள்லு  மாத்தி மாத்தி குரைக்க தான் போகுது.
குரைக்கும் நேரம் போக மற்ற நேரங்களில்  எனக்கு நாய்களை பிடிக்கவே செய்கிறது.


Also refer:

http://thanikaatturaja.blogspot.com/2010/07/blog-post_09.html

ஒபாமா-வும் இந்திய அரசியலும்!!

Click on the images to view in full size








இந்த படங்களை forward  செய்தவன் நண்பன் பிரபு[அவனக்கு யார் forward செய்தாங்களோ ..........:) ]

வெள்ளி, 12 நவம்பர், 2010

ராதே ... II























மழைக் காலத்தில் கிழிறங்கி
மலை முகட்டைத்   தொட்டுக் 
குளிர்விக்கும்
மழை மேகம் போல ...

ஊடலுக்கு பின்
மழை மேகமாய்
சில நேரங்களில்
நீயும் ....
சில நேரங்களில்
நானும் ...





கார்மேக வானத்தை கண்டு
அகவும் மயில் போலவே...
ஊடலுக்கு பின்பான
நம் வார்த்தைகள்...

மழை ஒய்ந்த பின்
கூவும் குயில் போலவே ... 
கூடலுக்கு பின்பான
நம் வார்த்தைகள் ...




இருட்டு வானில்
எண்ணற்ற நட்சத்திரங்களை போலவே
நீ வருவதற்கு முன்பாக
மனம் முழுவதும் காதல் எண்ணங்கள்  பல ... 

நீ வந்த பின்போ
பவுர்ணமி நிலவு
வானை  ஆக்கிரமிப்பதை போலவே
என் மனம் முழுவதும் நீ ...
 
 
 
 
எனக்கு ...
காதல் மலர் தாமரை
காதல் மொழி மௌனம்
காதல் என்பது நீ .
 

வியாழன், 11 நவம்பர், 2010

ராதே ...





















 
கடலில் வாழும் இரு
மீன் குஞ்சுகள்
கடலின்  அகலம் ஆழம்
பற்றி தர்க்கம்  செய்வதைப்  போல ....

நீயும் நானும் காதலில்
வாழ்ந்து கொண்டே
காதலைப்  பற்றி அவ்வப்போது 
தர்க்கம் செய்து கொண்டேதான்
இருக்கிறோம் ...



கடலில் வாழும்
மீன் கரையில்
நீரின் சுவாசம் கிடைக்காத போது
உயிர்  துறப்பதை  போலவே

கரையில்  வாழும் நானும்
காதலின் சுவாசம்
கிடைக்காத  போது
உயிர் துறக்கிறேன் ...





நானும் நீயும்
காதல் அனுபவத்தில் கலந்த பின் ...

உன் உடலும் என் உடலும்
என் மனமும் உன் மனமும்
உன் உணர்வும் என் உணர்வும்
என் உயிரும் உன் உயிரும்

கபடி விளையாட்டில்
ஆடுகளத்தின் பக்கம் மாறி மாறி
விளையாடுவதை போல

காதல் ஆடுகளத்தில்
விளையாடிக்  கொண்டே உள்ளன ...






நான் உன்னை பார்க்காத நேரங்களில்
நீ என்னைப் பார்த்த போது .....

உன் ஓர விழிப் பார்வையால்  
என் கண்களைப் பார்த்த போது ....

புன்னகைக்க சொல்லி  காதல் சொல்லியும்
நீ மறுத்த போது ...

நான் உன்னை ஒளிந்திருந்து கவனிப்பது
தெரியாமல் பூக்களுடன் காதல் மொழி பேசிய போது ...

நீயோ  காதலை ஒளித்து வைக்கிறாய் ...
நானோ அதை தேடாமலே கண்டு பிடித்து விடுகிறேன் ...    

புதன், 10 நவம்பர், 2010

வெள்ளை ரோஜா -சிகப்பு ரோஜா



















என் மீது உனக்கு
காதல் எப்படி வந்தது
என்று கேக்கிறாய் ......

மொட்டாக இருந்த
ஒன்று பூவாக  மலர்ந்த
அதிசயம் போலவே ....

உன் மீதான என் காதல் 
மலர்ந்ததும் அதிசயமே !!!




மழைக் காலத்தில் ...
உன்  பார்வை தரிசனம்
கிடைக்கும் மின்னல்
மழையையும்.....
தரிசனம்  கிடைக்காத  மின்னல்
இடியையும்  பூமிக்கு   
அனுப்பி வைக்கிறதோ...?




நீ நட்டு வளர்க்கும்
ரோஜா செடியில் மட்டும்
எப்படி ஒரே நேரத்தில்
வெள்ளை ரோஜா
சிகப்பு ரோஜா
என்று அதிசயப்பட்டேன் .....

உன் காதல் பார்வையில்  ஒன்று
உன் வெக்க பார்வையில்  ஒன்றென
என் இதயத்தில் பூத்த
இரு காதல் ரோஜாக்கள் மூலம்
அதிசயத்தின் காரணம் புரிந்து கொண்டேன் !!

செவ்வாய், 2 நவம்பர், 2010

நான் உன்னைக் காதலிக்கிறேன்..
























வானில் நஷ்சத்திரங்கள் 
ஒவ்வொன்றும் காதலைச்
சொல்ல ஏற்றுக் கொல்லாத
பௌர்ணமி நிலவு ....
சூரியன் காதலைச் சொல்ல
வருவதைக் கண்டதும்
ஓடி ஒளிவதேன்....
இதன் பெயர் தான் காதல் வெக்கமோ ?   




 உன் கவிதை எல்லாம் பொய் என்றாய் ....
ஆமாம் ...நீ சொல்வது உண்மைதான் என்றேன் ...
எப்படி சொல்லுகிறாய்  என்று  கேட்டாய்....

காதலின் நிழல் தானே என் கவிதையெல்லாம்  .....
நிழல் பொய் தானே என்றேன் .....




 நீ மல்லிகை  பூக்களை
தொட்டு பறிக்கும் போது ஒவ்வொன்றும்
 "நான் உன்னைக் காதலிக்கிறேன் "
என்று சொல்லத் துடிக்கிறது ....
நீயோ அதன் உயிரைக்  கிள்ளி
சரமாக்கி கூந்தலில்  சூடிக் கொள்கிறாய் ....
நீ காதல் நெஞ்சுக்காரி என்றுதான்
நினைத்து இருந்தேன்...
இப்படிக்  கல்நெஞ்சக்காரியாய்
இருக்கிறாயே  ?!




வெறுமையை சுவாசித்தேன் ..
வெறுமை எனது உணர்வாயிற்று  ..
உன் கண்களை கண்டேன் ..
நீயோ உன்  சந்திர காந்தப்  பார்வையால் ...
என் வெறுமையை  காதலால் நிரப்பினாய் ...!!



நான் பெண்ணாய் பிறந்திருந்தால்
நீ யாக இருந்திருப்பேன்...
நான் ஆணாக பிறந்ததால் ...
காதல்  அடையாளம் காட்டியது ...
உன்னை நானாக ......

திங்கள், 1 நவம்பர், 2010

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ..

























பனிச்  சாரலில் ...
மலை மேகங்களில் ...
அருவிகளில்...
காட்டாறுகளில்...
என எங்கு எங்கோ எல்லாம்
பார்வை யிட்ட காதல் ...
உன் ஈர விழி
மின்னல் தெறிக்கும்  புன்னகை
மலர்ந்தும் மலராத வெக்கத்தை  பார்த்து
படைப்பின் பரிபூரணம்  நீ தான்
என்றுணர்ந்து  உன்னிடம் தஞ்சம் புகுந்தது .....

நானும் காதலை எங்கு எங்கோ
தேடி ...
பரிபூரண காதலை உன்னிடம்
கண்டு  காதலுற்றேன் ....





நீ ஓடையில்
குளித்து விட்டு
ஈரம் சொட்ட வருவதும் ....

காதல்.....
பௌர்ணமி  நிலாச் சாரலில்
நனைந்து கொண்டே
நம் இருவருக்குமிடையே வருவதும் ...

பேரழகு ...





பௌர்ணமி நிலவு
இரவைக்  காதலாக்குகிறது .....

உன் ஈர  விழிப் பார்வை
அந்தக்  காதலை அழகாக்குகிறது..... 




பௌர்ணமி நிலவுக்கு
என் மனதைக் கொடுத்தேன் ..
சில கவிதைகளை பரிசாக
அள்ளித் தந்தது ....

உன்னிடம்  என் மனதைக்
கொடுத்தேன் .....
காதலைப்  பரிசாக
அள்ளித் தந்தாய்.....

வியாழன், 21 அக்டோபர், 2010

அதென்ன.. ராஜ யோகம்?



















நாம் கொசுவிடமும் ,சிங்கத்திடமும்  ஒரே மாதிரி நடந்து கொள்கிறோமா என்றால் இல்லை என்பது தான் பதில்.
கொசு ஒரு வித உந்து சக்தியுடன் செயல் படுகிறது .சிங்கமும் ஒரு வித சக்தியுடன் செயல் படுகிறது.
கொசு -வின்   சக்தி ரொம்ப குறைவாக இருப்பதால் நாம் ஈசி யாக  நசுக்கி போட்டு விடுவோம் .
ஆனால் சிங்கத்தை பார்த்தால்......அப்புறம் எந்திரனில் வில்லன் ரோபோ ஒரு டயலாக் விடுவாரே  "ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ....வசி....ம்ம்ம்மேமேமேமேஏஏஏஏஏ " அந்த நிலைமை தான்.

இந்த பிரபஞ்சமே மிகப் பெரிய ஆற்றல் கோளமாக இருந்தது என்றும் ,பின் வெடித்து சிதறியதாக Big bang தியரி சொல்லுகிறது .ஆற்றல் அழிவதில்லை ...ஒரு ஆற்றல் பிறிதொரு ஆற்றலாக  மாறுகிறது என்று  நம்ம ஐன்ஸ்டின்   கொள்ளு தாத்தா கூட சொல்லி உள்ளார்.

நம்ம பாரதி தாத்தா கூட "எங்கு எங்கு காணினும் சக்தியடா " என்று சொல்லி உள்ளார்.

சக்தி என்பது பல்வேறு நிலைகளில் செயல் படுவதை நாம் காணலாம்.கொசு இயங்க தேவையான ஆற்றல்,மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ,பூமி இயங்க தேவையான ஆற்றல் ,சூரியன் ,நச்சத்திர, பிரபஞ்ச ஆற்றல் என்று ஆற்றல் பல்வேறு ரூபங்களில் செயல் படுகிறது .

இந்த ஆற்றல் வெறும் ஆற்றலாக     மட்டும் செயல் புரிவதில்லை .சூரியன் என்ற வெப்பம் பூமியை உமிழ்ந்தது .பின் பூமி என்ற வெப்ப ஆற்றல் ...குளிர்ந்து பலவேறு ஆற்றலாக மாற்றம் அடைந்து ....பல்வேறு நிலை மாற்றம் பெற்று இன்று உள்ள பூமி ,வலை தளம் என்ற நிலைக்கு நாம் வந்து உள்ளோம்.

பூமிக்குள் இருந்த ஆற்றல் பல்வேறு நிலை மாற்றத்தின் பின் நாம் உருவானோம்...  அப்படி என்றால் பூமி தான் நாமா?
சரி ...பூமி   சூரியனில் இருந்து உருவானது ..அப்படி எனில் நம் முன்னோர் சூரியனா ? சூரியன் எங்கிருந்து வந்தது ...பிரபஞ்சம் என்றால் ...பிரபஞ்ச ஆற்றல் நாமா ?

பூமிக்கு சிந்திக்கும் சக்தி கிடையாது என்றால் ....மண்ணில் இருந்து பிறந்த நாம் எப்படி சிந்திக்கிரோம்....???

இந்து மதத்தில் பூமியை  குறிக்கும் கடவுளாக வினாயகரை சொல்லுவதும் ....அவருடைய வயிறு தான் பூமி என்று சொல்லுவதாக சுகி.சிவம்  புத்தகத்தில் படித்து உள்ளேன் .அர்த்தம் உள்ளதாகவே தோன்றுகிறது.

ஆற்றல் வெறும் ஆற்றலாக மட்டும் செயல் படாமல் .....மிக ஆழ்ந்த உள் உணர்வுடன் செயல் படுவதாக தோன்றுகிறது.

பிரபஞ்சம் சக்தியாக செயல் படுகிறது ....சக்தியால் அடிப்படையில் இணைக்கப்பட்டு உள்ளது .உடலால் ,மனத்தால் ,புத்தியால் ,மத வேறுபாட்டால் ,இன ,மொழி என எத்தனயோ பிரிப்பதாக இருந்தாலும் ....உண்மையில் பிரிவினைக்கு அப்பார்பட்ட இணைப்பு உள்ளது.

அதை நாம் சரியாக விழிப்புணர்வுடன் புரியாமல் .........

இப்படி தான் இணைகிரோம்.....
நாங்க மதுரைகாரங்க , தமிழ் சினிமாவையே நாங்க தான் தாங்கி பிடிக்கிறோம் என்பார்  ஒருவர்.
உடனே இன்னொருத்தார் நான் ஈரோட்டு காரன் என்பார் . நாங்க எல்லாம் பகுத்தறிவு சிங்கமப்பா என்பார்.
உடனே தம்பி உங்க ரெண்டு பெற விட அல்வா குடுப்பதில் எங்கள மிஞ்ச முடியாது என்பார் திருநெல்வேலி காரார்.
[எத்தனை நாளைக்கு தான் இருட்டு கடையில் அல்வா செய்விர்கள் திருநெல்வேலி  ராசாக்களே.....இனிமே வெளிச்ச கடையில் அல்வா கிண்டுங்கள் ...]

இடத்தால் ஏற்படும் பிரிவினை சாதாரணமானது தான் .ஆனால் சாதி ,மதம்   போன்ற வற்றால் ஏற்படும் பிரிவினை பற்றி  சொல்ல தேவை இல்லை.

சக்தி நிலையில் மிக சாதாரண நிலை ஓன்று இருக்கும் எனில் ...மிக உச்ச நிலையில் செயல் படும் சக்தி கண்டிப்பாக இருக்க வேண்டும்.
கோவம்,அதிகாரம் ,பண பல சக்தி,ஆள் பல சக்தி, ஆணவ சக்தி  என்று எத்தனயோ சக்திகள் நம் உள்ளே உள்ளது. 

காதல் ஒரு அற்புதமான  சக்தி. காதலால் பிரபஞ்சத்தோடு ஒன்ற முடியும்.

பிரிவினைக்கு அப்பாற்பட்டு சக்தியால் ஒன்றும் யோகம் தான் ராஜ யோகம்.

புதன், 13 அக்டோபர், 2010

என் சுவாசக் காற்றே ...



















உன் சுவாச காற்றை 
நான் சுவாசித்ததில் என்னுள்ளே
காதல் உணர்வுகள் தீ பற்ற தொடங்கின ...

அந்த காதல் தீ  என்
உயிரை   விழிக்கச்  செய்தது ...

தீ யின் ரௌத்ரம்  என் எண்ணங்களை எரித்து  
மனம் என்ற ஒன்றை சாம்பல் ஆக்கியது...

உன்  அணைப்பில்
என் உணர்வும் உன் உணர்வும் இரண்டற
கலந்த காதல்  ஈரத்தில் தீ  அணைந்தது....

நம் இருவரை சுற்றிலும்
காதல் கானம் இசைத்தது....

அந்த நாதம்  நான் நீ
நீ நான் என்று  உணரவைக்க....

பிரபஞ்சம் நான் ஆயிற்று ....

வியாழன், 7 அக்டோபர், 2010

என் ஆசிரியை காதலி ...!!!















நீ காதல் பாடம் எடுக்கும் போது எல்லாம்
நீ தான் என் ஆசிரியை ...நானோ  கடைசி வரிசை மாணவன் ..... 

ஒவ்வொரு முறையும் என்னை கேள்விகள் கேட்டு கேட்டே
பார்வையால் பார்த்துப் பார்த்தே ....
காதல் பாடத்தில் என்னை தேர்ச்சி பெறச் செய்தாய் ....

மலையில் யோகம் புரியும் குன்றுகளை
மேகங்கள் தழுவிக்   காதல் சொல்லவதை உணர   கற்று கொடுத்தாய்..

மழை தன் காதலன் கடலுடன்
கலந்து கரைந்து போவதை உணர  கற்று கொடுத்தாய்..

அருவி இடைவிடாது  பாடும் காதல் பாடலை
கேட்டு உணர கற்று கொடுத்தாய்....

இப்பிரபஞ்சத்தில் காதல் அணுக்கள் பரவி இருக்கும்
இடத்தை எல்லாம் உணர   கற்று கொடுத்தாய் ....

காதல் மொழி பேசுவதல்ல ....மௌனம் தான் காதல் மொழி
என்று மௌனமாக உணரக் கற்று கொடுத்தாய் ....

உயிர்கள் அனைத்திலும் காதல் என்ற விதை உள்ளது ....
எனக்கோ நீ தான் நீர் ஊற்றி வளர வைத்தாய் .... 

என் விழிகளுக்கு காதல் பார்வை தந்தாய்.....
என் பார்வையில் நீ காதலி   இல்லை ....
காதல் என்பதே நீ தான் ......

கண்ணாடியில் உன் உருவத்தைக் காட்டினேன் ...
அது காதலைப்  பிரதிபலித்தது .......

செவ்வாய், 5 அக்டோபர், 2010

மௌனம் எனது தாய்மொழி...























வண்டி வண்டியாய் கனவுகள் ....

சில கனவுகள் என்றும்  நிறைவேராதவை ...    
அவைகள் என்னை பார்த்து சிரித்தன ....

சில கனவுகள் லட்சிய கனவுகள்
அவைகள் என்னை  தாகத்தோடு பார்த்தன ....

சில கனவுகள் பேராசை கனவுகள்
அவைகள் என்னை தவிப்போடு பார்த்தன ...

ஒவ்வொரு கனவையும் பிரித்து அவரவர் ஊருக்கு 
அனுப்பி வைத்தேன் ...

சில கனவுகள் என்னை விட்டு பிரிய மறுத்து அழுதன ...
"உங்களை ராஜ கம்பளம் விரித்து வரவேற்க
நெறைய பேர் காத்து கொண்டு உள்ளார்கள்.. "
போய் வாருங்கள் என்றேன் ...
எனக்கு விடை கொடுத்தன..

கனவுகளை விட்டுவிட்டு புத்தியிடம்
அடைக்கலம் கேட்டேன் ...

என்னை புன்னகைத்தபடி வரவேற்றான் ...
பயணம் நன்றாகவே இருந்தது ...

கொஞ்ச நாட்களில் புரிந்தது ...
புத்திக்கு நெறைய எதிரிகள் என ...

எனக்கு புத்தியை  பிடித்துதான்  இருந்தது...
புத்தி சுகமாக வாழ வைத்தான் ....

ஆனால் தன்னை சுற்றி எங்கும் வறட்சி 
என்றதை  நம்ப மறுத்தான் ....

நீ கொஞ்ச நேரம் உறங்கு என்று  சொன்னேன் ...
நான் உறங்கி விட்டால் உனக்கு ஏது பாதுகாப்பு
என்று புத்திசாலிதனமாக  கேட்டான்.....

என்னால் என்னை பாதுகாத்து கொள்ள முடியும் என்றேன் ...
நான் இல்லாவிட்டால் நீ ரொம்ப கஷ்டபடுவாய்
என்று சொல்லி உறங்க சென்றான் .....

மனம் என்ற கனவு விழி ...
புத்தி என்ற நனவு விழி ...
இரண்டும் மூட.....
பிரபஞ்சம் என்ற
தாயின் கருவறையில்.....
உறங்கச் சென்றேன் ...
மௌனம்  எனது தாய் மொழி ஆயிற்று........

வெள்ளி, 1 அக்டோபர், 2010

நான் கடல் ...நீ அலை ...


















நித்தம் நித்தம் ஆர்ப்பரிப்பு ...
மோனத்தில் இருந்து தான் பிறந்தேன் ...
எங்கே இருந்து  தோன்றுகிறது இத்தனை ஆர்ப்பரிப்பு ..
பேரலையாய் எழுந்த என்னுளே ...
நித்தம் நித்தம்  எத்தனை எத்தனை சிற்றலைகள் ...

சந்தோஷ அலை ,துக்க அலை ...
காதல் அலை ,காம அலை ..
ஆசை அலை ,பொறாமை அலை.. 
நட்பு அலை ,எதிர்ப்பு  அலை.. 
பாச  அலை ,வெறுப்பு அலை... 

ல்லா வித ஆர்ப்பரிப்புக்கும்  கரையில்
மரணம் என்று உணர்ந்தபோது  நடுங்கினேன் ....
கரையில் நான் காணமல் தான் போய் விட்டேன் 
என நினைத்து இருந்தேன்....

ஒரு கணத்தில் ...

அலை என்ற ஒன்று கடலின் தோற்றமே என உணர்ந்தேன்...
அலை பிறக்கவும் இல்லை ...இறக்கவும் இல்லை ...
நித்தம் பல கோடி அலைகள் என்னுளே ....
கடல் நித்திய யவ்வனம்...அலை  கணநேர யவ்வனம்...
நான் கடல் ..மனமே நீ அலை ..அலை..அலை..

வியாழன், 23 செப்டம்பர், 2010

உயிரியல் WEDS காதலியல் ...III


















நான் புதிதாக காட்டிய பூவை 
பார்த்து என்ன பூ என்று கேட்கிறாய்...
நானோ காதல் பூ என்கிறேன் ....
எங்கே பூத்தது என்று கேட்கிறாய்...
என்  இதயத்தில் என்கிறேன்  ....
எப்படி வளர்த்தாய் என்று கேட்கிறாய்...
நம் காதல் நினைவுகள் நீராய் ஊற்றி என்கிறேன் ....
இது காதல் பூவா இல்லை
காதுல பூவா என்று கேட்கிறாய்..
உன் கூந்தலில் சூடிப் பார் ....
அது சொல்லும் ..
"இது உன் காதலனின்  பூ என்று" என்கிறேன் .....

சிவனை பூவால் அர்ச்சனை செய்தால்
அது சிவ யோகத்தை தரும் என்பது
நெறைய பேருக்கு தெரியும் ...
நீ கூந்தலில்  சூடும் ஒவ்வொரு  பூவும்    
காதல் யோகத்தை பெறுவது எனக்கு மட்டுமே தெரியும் ...

என் காதல் நோய்க்கு
மயக்க மருந்து
உன் முத்தம் ...
நிரந்தர தீர்வு
நீ  என்னைக்  காதலித்து
கொண்டே இருப்பதுதான்...

உன் அருகில்  இருக்கும் 
ஒவ்வொரு ஷணமும்
நான் காதல்வாதி என்ற
பெயரில் உயிர் பெறுகிறேன்...
உன்னை பிரியும் ஒவ்வொரு ஷணமும்
எதார்த்தவாதி என்ற பெயரில்
வெற்று ஆசைகளில் உயிர் இழக்கிறேன்...

நீ பேசும் வார்த்தைகளுக்கிடையே
தொடர்ந்து வரும் மௌனம்
கூட நம் காதலையே  பேசுகிறது ..... 

புதன், 22 செப்டம்பர், 2010

உயிரியல் WEDS காதலியல் ...II


















என் கனவுகளும் உன் காதலும் 
கொஞ்சி விளையாடுகின்றன .....
என் கனவுகளுக்கு களைப்பு வரும்போதெல்லாம்
நீயோ புன்னகை பூக்கிறாய்...
மீண்டும் என் கனவுகளோ  விளையாட கிளம்பி விடுகின்றன ...
நீ இப்படியே செய்து கொண்டிருந்தால்
நான் எப்போதுதான் அவற்றை என்
வீ ட்டிற்கு அழைத்து செல்வது ...!?

உன் அருகில் நான் வரும்போது கூட
எல்லா மழைதுளிகளும்
உன் மிதே விழுவேன் என அடம் பிடிக்கிறதே...
நல்லவேளை.. மழைத் துளிகளுக்கு உயிர் இல்லை
என்றுதான்  இதுவரை நினைத்து இருந்தேன்...
இப்பொழுதெல்லாம்  பயமாகவே  இருக்கிறது...
உன் மீது விழுந்தவுடன் அவை 
உயிர்த் துளியாக மாறி விடுமோ என்று ..!?


கவிதைக்கு பொய் அழகாமே..!?
உணமைதான் கவிதைக்கு அழகு
உன்னை பற்றி எழுதும் போது...


பிரம்மா எல்லா உயிர்களையும்
படைத்து விட்டு உன்னைப் படைக்கும்
போது தான் காதல் பற்றிய ஞாபகமே
வந்ததாமே ....!?
உயிரில் காதல் தோற்றுவிக்கும்  கலையை
பிரம்மனுக்கே கற்று தந்தவள் நீதானோ !?

பௌர்ணமி நிலவு  பூவாக
மாறிவிட ஆசை படுகிறதாம்..
ஏன் என்று கேட்டால்..
உன் கூந்தலில் ஒரு நாளேனும்
உயிர்ப்போடு வாழ வேண்டும் என்கிறது...

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

உயிரியல் WEDS காதலியல் ...
















உன் கண்களிலோ உயிரை வழிய விடுகிறாய் ..
அதை உள்வாங்கும் என் கண்களோ..
உயிரை காதலாக்கி இதயத்தில் நிரப்புகிறது ..
என் இதயமோ ஒவ்வொரு சுவாசத்திற்கும்
நம் காதலை சொல்லி சொல்லியே துடிக்கிறது...  


உயிர்களுக்கு உயிர் தரும் உன் கண்களிலா ?
கனிகளுக்கு சுவை தரும் உன் உதட்டிலா ?
பூக்களுக்கு வாசம் தரும் உன் கூந்தலிலா ?
நிலவுக்கு வெளிச்சம் தரும் உன் புன்னகையிலா ?
எங்கே தான் நம் காதலை வைத்து உள்ளாய் என்று
கேட்டால் ..   உயிரில் என்கிறாய் ....
சரி..உன் உயிரை எங்கே வைத்து உள்ளாய் என்று
கேட்டால்..  அது தான் உன் உயிரில்  கலந்து விட்டதே என்கிறாய் .....


என்னை விட்டுவிட்டு என் மனம்
உன் பின்னாலேயே  வருகிறதே ....
நான் சொன்னால் தான் கேட்க மாட்டேன்கிறது ...
நீ யாவது அடித்து விரட்ட கூடாதா என்று கேட்டால்..
நீ இல்லாத நேரங்களில் அது தானே என் துணை...
என் துணையை  நான் எப்படி விரட்ட முடியும் என்கிறாய் ....   



நீ நட்டு வளர்க்கும் மல்லிகை செடி ...
நீ நித்தம்  குளிக்கும் நீரோடை ...
நீ  தினம் தினம் வணங்கும் கடவுள் ..
அனைவருமே எனக்கு போட்டியாக
உன்னிடம் காதலை சொல்ல துடிக்கிறார்களாம்..!!
நீ என் காதலியா.. இல்லை..
காதல் என்பதே நீ தானோ ?   



வெக்கம் கலந்த உன் முத்தம்
என் காதல் ஞானத்திற்கான
திக்' ஷை' .....  


வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நீ வேண்டும்....






















உன் கண்களில் வழியும் உயிரை உணர வேண்டும் ..
உன் சுவாசம் என் சுவாசம்  ஆக வேண்டும்..
உன் கன்னத்தின்  சுவை என் உதட்டில் ஒட்டி கொள்ள வேண்டும்..
உன் காது மடல் மென்மையில் நான் காலம் கடக்க வேண்டும்..
உன் மொழியில்   காதல் மொழி கற்று கொள்ள வேண்டும் .. 
உன் கூந்தல் மட்டும் நம்  போர்வையாய் மாற வேண்டும் .. 
உன் இதயத்திடம்  என் இதயம் உன் பெயர் சொல்லி துடிக்க வேண்டும் ..   
உன் இடையில் என் ஆணவம் வழுக்கி சரிந்து விழ வேண்டும் ..
உன் உயிர் வாசலில் என் உயிர் தொலைந்து போக வேண்டும் ..
உன் கால் கொழுசு  ஓசையில் சங்கீதம் பயில வேண்டும் ..
என் மனம்  கனவாக கலைந்து போக வேண்டும் ..
நான் உயிர் வாழ நீ  வேண்டும் ..





சுனைனா:
போடா போடா புண்ணாக்கு ...நீ போடாத தப்பு கணக்கு.... 

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ராதா கிருஷ்ணா காதல்...


















இந்தப் பதிவு கொஞ்சம் வள வள என்று இருக்கும்...பொறுமை இருந்தால் படித்து பார்க்கவும். கொஞ்சம் சீரியசான காமடி பதிவு,நம் வாழ்க்கையை போலவே.பதிவு கோர்வையாக இருக்காது.


மகாபாரதம் புராணகதை...கிருஷ்ணன் என்ற கதா பாத்திரம் என்பதெல்லாம் பொய்...  என்ற நினைப்பிற்கு அப்பாற்பட்டு நான்   புராணகதையை மையப்படுத்தாமல்  உயிரை மையப்படுத்தி எழுதுகிறேன்.மதத்தை  மையமாக  வைத்து இதை  நான் எழுதவில்லை.எனவே மதம் சம்பந்தபட்ட  விவாதத்தை எழுப்பாமல் இருந்தால் நல்லது. விவாதத்தை எழுப்பினால் ரொம்ப நல்லது. இவை அனைத்தும் என் சுய  புரிதல்(புராணம்) மட்டுமே மற்றும் ஓஷோ வின் கருத்துகளை சார்ந்தும் என்னுடைய 12 வயது  அறிவிற்கு தகுந்தவாறும்   இருக்கும்.
   

கிருஷ்ணன் ஒரு சிவ ஞான ராஜ யோகி.[அப்படி என்றால் என்ன என்று தெரிய வில்லையா?].கிருஷ்ணன் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் கூட.

ஒரு காலத்தில் ஒரு மனிதன் இருந்தான்.அவன் வாழ்கையின் நிலைய்ற்ற தன்மையை உணர்ந்தான்.அவன் தன் சுய முயற்சியால் போராடி யோக கலை மூலமாக ஞானோதயம் பெறுகிறான்.அவன் தான் சிவன்.சிவன் ஒரு ராஜ யோகி .அவன் தன்னுடைய சிஷ்யர்கள் ஏழு பேருக்கு தீக்ஷை தருகிறான்.அவர்களும் தன் சுய முயற்சியால்  ஞானோதயம் பெறுகின்றனர்.இவ்வாறு தான் யோக கலை பரவுகிறது.எல்லா   யோகிகளுக்கும்  சிவன் தான் குரு.[யோகி என்ற வார்த்தையை கேட்டவுடன் நித்தியானந்தா ஞாபகம் நமக்கு வந்தால் அது நாம் வாழும் காலத்தின் துரதிஷ்டம்.......] பதஞ்சலி  யோக சூத்திரத்தில் கடவுள் பற்றி எங்கேயும்  கூறப்படவில்லை.அதில் மனிதன் -யோகம் பற்றி மட்டுமே கூறப்படுகிறது. பதஞ்சலி  யோக சூத்திரத்தை நான் அறியவில்லை .அதன் சாராம்சம் அறிவேன்.
இந்த பிரபஞ்சத்திற்கு கடவுள் என்று யாரும் இல்லை.இந்த பிரபஞ்சத்திற்கு  மையம் என்று எதுவும் இல்லை. அப்படி மையம் என்று எடுத்து கொண்டால் ஒவ்வொரு அணுவும் மையம் தான்.
சிவன் நம்மை  போலவே பிறந்தான்.ஆனால்  அவனின் தேடல் உயிர் தன்மையின் உச்சதிற்கு அவனை எடுத்து சென்றது.அடிப்படை உண்மை இவ்வாறு தான் இருந்திருக்க  வேண்டும்.

 இங்கே யோகம் என்பது எல்லாவற்றையும்  இணைக்கும் முயற்சி .உதாரணத்துக்கு  அம்மா தன் குழந்தை மீது உள்ள அன்பின் மூலம் தானும் தன் மகனும் ஓன்று என்பது போலவே உணர்வாள். அன்னை தெரசா போன்றவர்கள் தன்னை தன் அன்பின் மூலம் பல உயிர்களுடன் இணைத்து கொள்கிரார்கள்.

ஆத்திகர்கள் தன் கடவுள் கொள்கை  மூலம்  ஒரு குறிப்பிட்ட குழுவுடன் இணைந்து கொண்டு மற்றவற்றில் இருந்து பிரிகிறார்கள்.இவர்கள்   யோகத்திற்கு  எதிரானவர்கள் .
நாத்திகர்களும்  தன் கொள்கை மூலம்  ஒரு குறிப்பிட்ட குழுவுடன் இணைந்து கொண்டு மற்றவற்றில் இருந்து பிரிகிறார்கள்.இவர்களும் யோகத்திற்கு  எதிரானவர்கள்.
ஆத்திகர்கள் மூடத்தனம் அதிகம் கொண்டவர்களாகவும் ..நாத்திகர்கள் வெறுப்புணர்வு அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பதை பார்க்கலாம்.
அன்பு,புரிதல் அதிகம் உள்ளவர்கள் யோகதன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்  என்பது என் புரிதல்.

பின் கடவுள் என்பது எவ்வாறு உருவானது.?
சுய சிந்தனை ,தேடல் அற்ற  சின்ன பசங்க சிவனுக்கு பக்க வாத்தியம் ஊத ஆரம்பித்து விட்டனர்.இவர்கள் ஆத்திகர்கள்.
சுய சிந்தனை ,தேடல் அற்ற வேறு வகையான  சின்ன பசங்க   சிவனையும் ,சிவனுக்கு  பக்க வாத்தியம் ஊதுபவர்களை தீட்டி தீர்க்க ஆரம்பித்தனர்.கடவுளை காட்டு,உப்புமாவை  காட்டு என்று விவாதம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.இவர்கள் நாத்திகர்கள்.
இந்த இரு வகையான சின்ன பசங்க  ஒரு போதும் உயிர் தன்மையின் உச்சத்தை தொடுவதில்லை.

சிவன் , கிருஷ்ணன் இருவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்று நான் பார்க்கவில்லை.அவர்கள் இருவரும் இந்திய நாட்டில் பிறந்த அதி முக்கியமான யோகிகள்.
சிவன் முதல் யோகி. கிருஷ்ணன் சிவ வம்சத்தில் வந்த மிக முக்கியமான யோகி.
அவர்கள் இருவருமே சமுகத்தால் கடவுளாக உயர்த்த பட்டனர்.

 இந்த பிரபஞ்சத்தில் யாரையும் நான்  அவதார புருஷனாகவோ....அண்டர்வேர் புருஷனாகவோ  நினைக்கவில்லை.
ஆனால் இந்திய நாட்டில் சிவன், கிருஷ்ணன் இருவரும் குறிபிடதக்கவர்கள் . .எந்த காலத்திலும் நான் சிவனுக்கு மட்டுமே தலை வணங்குவேன்.[இருந்துட்டுப் போ ...இப்ப அதுக்கு என்ன ?].சிவனே என் குரு.[ம்...இது சிவனுக்கு தெரியுமா?]

எவ்வளவு பெரிய மகான் என்றாலும் என்னை பொறுத்த வரை மாக்கானே, ஞானோதயம் அடையாதவரை. [இதை நான் ஈகோ- வால் சொல்ல வில்லை .என் உயிரில்  இருந்து சொல்லுகிறேன்."நான் யாருடைய    ஈகோ-வுக்கும் தலை வணங்க மாட்டேன் .ஆனால் ஒவ்வொரு உயிரையும் உயிராக பார்க்கிறேன்" என்ற அர்த்தத்தில் சொல்ல வருகிறேன் ]

சரி இனி கதையின் நாயகி-நாயகன்  ராதா-கிருஷ்ணன் இருவருக்கு வருவோம்.
கிருஷ்ணனை  ஆண்மையின் உச்சம் என்று சொல்லலாம் .ராதை-யை  பெண்மையின் உச்சம் என்று சொல்லாம்.இயல்பாகவே  கிருஷ்ணனும் ராதை-யும்  காதலில் விழுகின்றனர் . தங்கள் உயிரின் முழுமை தன்மையை  பரி பூரணமாக   உணர்கின்றனர்.
அங்கே  கிருஷ்ணன்   என்ற ஆண் அடையாளமும் ராதை  என்ற பெண் அடையாளமும் முழுமை(சிவம்) யில்  கரைந்து விடுகிறது.  கிருஷ்ணன்  ராதையிடம் பிருந்தாவனத்தில்   ராஜ லீலா-வின் போது  உணர்ந்த முழுமையை தன்னுடைய பனிரெண்டாவது   வயதில் கோவர்த்தன மலை மீது பரிபூரனமாக பெறுகிறான் .இதன் பெயர் தான் தன்னை உணர்தல்.ஞானோதயம்.
[இதெல்லாம் உனக்கு எப்படி தெரியுமா ?-கோவை வட்ட செயலாளர் வண்டு முருகன் என்னிடம் சொன்னார் ]

கிருஷ்ணன் ஒரு காமுகன்,etc என்று ஒரு சிறு பயல் [என்னை விட ] வோர்ட் பிரஸ் தளத்தில் எழுதி இருந்ததை  படித்தேன்.
அவன் கோபியர்களின் ஆடைகளை எடுத்து  ஒளித்து வைத்து கொள்வானாம் .அதனால் காமுகன் என்று அந்த சிறுவர் சொல்லி இருந்தார்.
  கிருஷ்ணன் ரொம்ப ரசனை  உடையவன் .பெண்களுக்கு அவன் மேல் கோவம் இருந்து இருந்தால் அவனை அங்கேயே  அடித்து துவைத்து இருப்பார்கள்.அவனும் அடுத்த முறை அது போல் விளையாடி இருக்க   மாட்டான் .
அவன் தான் அவ்வாரு செய்வான் என்று தெரியுமே.ஏன் கோபியர்கள் ஆடைகளை குள கரையில் போட்டு செல்ல வேண்டும்.? கோபியர்கள் கிருஷ்ணனின் விளையாட்டை விரும்பி இருக்க வேண்டும்.
கிருஷ்ணனோ தன் சிறு வயதில் தான் அவ்வாரு செய்தான்.
ஒவ்வொரு வயதிலும் வெவ்வேறு  விளையாட்டு(வில்லன்களை கொள்ளுதல், நிறைய கல்யாணம் , குருசேத்தரம்  போர்,பகவத் கீதை etc ] செய்தான் .அவன் வெறும் காமுகனாக மட்டும் இருந்தால் எப்படி இத்தனை விளையாட்டுகளை செய்ய முடியும்.

நிர்வாணத்தின் தன்மை பற்றி அவன் வெகுவாக உணர்ந்து இருந்தான் .அதனால் தான் அவன்  பாஞ்சாலி துகிலுரிய  பட்ட போது உதவுகிறான் .[அப்போதே சுடிதார்,etc கண்டுபிடித்து இருந்தால் ...பாரத போரே வந்து  இருக்காது .பகவத் கீதை வந்து இருக்காது...நீங்களும் இந்த மொக்கை பதிவை படிக்க வேண்டி இருந்து இருக்காது..ஒரு வேலை இதன்  பெயர் தான் விதியோ ?]
 
கிருஷ்ணனை பெண்கள் மட்டும் இல்லை அனைத்து தரப்பினரும் [கொள்கை  வாதி என்ற உயிர்  கொலை செய்யும் சிறு பயல்களை தவிர ] விரும்பினர்.
கிருஷ்ணன் ஈகோ  அட்றவன்.அவனால் முழுமையாக எல்லோரிடமும் இருக்க முடிந்தது . நாம் தான் அப்படி இல்லயே. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதிப்பீடு வைத்து கொண்டு அலைகிறோம்.

கிருஷ்ணன் முழுமையானவன்.என்றும் அவன் காதலில் இருந்தான்.[நம் தமிழ் சினிமாவில்  காட்டப்படும் மொக்கை காதலுக்கும்  கிருஷ்ணனின் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .] 
ராதை முழுமையானவள்.
கிருஷ்ணன் ராதை -யை  தன்னுடைய 12  வயதில் பிரிந்து செல்கிறான்.ராஜ லீலா -வின் போது ராதை கிருஷ்ண-னின் புல்லாங்குழலை  வாசித்தபடி ஆழ்ந்த நடனத்தில் இருக்கிறாள்.அப்போது அவளை விட்டு பிரிந்து செல்கிறான்.[இதே தமிழ் சினிமாவாக இருந்தால் இந்நேரம் ஒரு ஒப்பாரி சாங் போட்டு விடுவார்கள்]  அதன் பின் அவளை பார்பதற்கு ஒரு முறை கூட அவன் வரவில்லை.அதன் பின்  ஒரு முறை கூட புல்லாங்குழலை  கிருஷ்ணன் வாசிக்கவே இல்லை .[நீ என்ன பின்னாடி இருந்து பார்த்தாயா ?]   
ராதை -யும் கிருஷ்ணனை தேடி செல்ல வில்லை.வேறு ஒருவரை மணந்து கொண்டாள்.[இங்கே தான் நெறைய கொள்கை வாத சிறு பயல்கள்   ராதையை ஒழுக்கமற்றவள் என்று திட்ட ஆரம்பித்து விடுகின்றனர்.தினம் தினம் எத்தனையோ பேர்கிட்ட ஏத்து வாங்கற பயலுக  இப்படி தானே திட்டி தீர்த்துக்க முடியும்.]
கிருஷ்ணன் -ராதையின் காதல் வடிவம் கடந்து இருந்தது.
கிருஷ்ணனை பல மணம் செய்து கொண்டவன் என்று யேசுவோர் பலர். [ அமையற ஒன்னும் டார்சர் கேஸ் -சா இருந்தா  வேற என்ன பாராட்டவா முடியும் ?]

கிருஷ்ணனால் பெண்மையை  வடிவம் கடந்து உணர முடிந்தது.அதனால்  எல்லா பெண்களிடமும் காதலோடு வாழ முடிந்தது.

கணவன் மனைவி என்ற பெயரில் நாம் என்ன காதலா செய்கிறோம் .வியாபாரம் தானே செய்து கொண்டு இருக்கிறோம். முதலில் இந்த சாதி வெறி பிடித்த சிறு பயல்களை  எல்லாம் பிடித்து மாட்டு வண்டியில் ஏற்றி  ஒஸாமா பின்லேடனிடம் அனுப்பி வைக்க வேண்டும். கல்யாணத்தில் சாதி மட்டுமா வருகிறது,பணம்,பதவி ,வீடு,etc....இதன் அடிப்படையில் செய்யும் கல்யாணத்தில் காதல் எங்கே வரும்?ஒரு வேலை மனைவி அருகில் இல்லாத நேரத்தில் தான் காதலே வரும் என்று நெனைக்கிறேன்.
 [இதெல்லாம் தனி காட்டு ராஜாவுக்கு நடக்காதுனு  நெனைக்கிறேன் ...ஆனால்  நடந்துருமோனு பயமா இருக்குது...USA -வுல பொறந்து இருக்கனும்.....தெரியாத்தனமா போயும்போயும் ஈரோடு மாதிரி ஒரு மொக்கை ஊருலயா  பிறக்கணும் ?பெங்களூர் ok.சென்னை ஈரோடு மாதிரி மொக்கை யான ஊர். சமீபத்தில் பீச் -ல கூட இந்த  காவல் துறை நண்பர்கள் தொல்லை சாஸ்தீயாம் ..வருங்காலத்தில் Living together லைப் தான் சக்கை போடு போடும் என நெனைக்கிறேன்.இதற்கு நான்  முழு ஆதரவு   தருகிறேன்.]


ராமன் ஒரு தட்டையான One dimensional மனிதன்.பாதுகாப்பான வியாபார சிந்தனை அதிகம் உள்ள பெண்கள் ராமன் போன்ற ஆணை விரும்புவர்.
கிருஷ்ணன் Multi dimensional மனிதன்.காதல் உணர்வு நிரம்பிய பெண்கள் கிருஷ்ணன் போன்ற ஆணை விரும்புவர்.
நான் அறிந்த வரையில் ஆண்களில் 99% பேர் ஆழ் மனதில் கிருஷ்ணன்.மேல் மனதில்(சமுகத்தில்)  ராமன்.

உதாரணதுக்கு ஆண்களில் உள்ள கிருஷ்ணன் % [என் கண்டுபிடிப்பு .....ஹி..ஹி.. ]

ரஜினி  98 %
கமல்   97 %
அஜித்   99 %
தனி காட்டு ராஜா 99.99% [ 100 % போட்டுக்கிட்டு தற்பெருமை பேசிட்டு திரியறவன்  நான் கிடையாது..அதுக்கு வேற ஆள பாருங்க ....] 
விஜய் 80 %
வெண்ணிற ஆடை மூர்த்தி 5 %

ராம ராஜன்   -மைனஸ் 20 %
விஜய  டி.ராஜேந்திரன் - மைனஸ் 90 % [என்னை பொறுத்த வரையில்] .........ஆனால பெண்கள்  மத்தியில் 98 % [ தலைவரின்  தங்கச்சி சென்டிமெண்டில் மயங்காத பெண்களே கிடையாதாமே   தமிழ் நாட்டில் .........
அது என்ன இவரு ஹீரோயின தொடவே மாட்டாராமே .......எனக்கொரு  சந்தேகம் ...கேட்டா  கோவிச்சுக்க கூடாது.....சிம்பு -வ பத்திதான் .....]  
ஒவ்வொரு பெண்ணும் ராதை தான் .என்ன % தான் பெண்ணுக்கு பெண் மாறு படும். 

சீதை கூட ராதை போன்றவள் தான் காதல் உணர்வில் .ராமன் மேல் தான் எனக்கு சந்தேகமாக உள்ளது.அவன்  ஆழ் மனதில் சந்தேகப் பேர்வழி -யாக  இருந்திருப்பான் என்று தோன்றுகிறது. 

பெண்களில் உள்ள ராதை (அன்பு உணர்வு,பெண்மை ,etc) % கண்டுபிடிப்பு ....[ஹி ..ஹி ..இதுவும் என் கண்டு பிடிப்பு தான் ]

 ஒவ்வொருவருக்கும் அவர்கள் அம்மா -100 % [அன்புணர்வில் ராதை ...]

கீழ்க்கண்டவர்களில்  முதல்  ஆறு பேர்    என்னிடம் காதலை  சொன்னார்கள் ...அவர்கள் என்னிடம் நடந்து கொண்ட விதத்தை வைத்து என் கண்டு பிடிப்பு....

என் அருமை பெருமை பற்றி யார் சொன்னார்களோ  தெரியவில்லை ?தினம் தினம் போன் மேல போன் ..

[கீழ் கண்டவர்கள்  அழகில் மட்டும்  ராதைகள்....  ]

சுனைனா [99 .99 %]
பாவனா [99 .98 %]
அனுஷ்கா[99 .97%]
அசின் [99 .96 %]
தமன்னா[99 .95 %]
நமீதா [ 99 % ]

கோவை சரளா [50 % ]
சொர்ணாக்கா -மைனஸ் 75 %
     

என்னை பொறுத்தவரை ஒழுக்கம்  உயிரில் இருந்து வர வேண்டும் .பிற உயிர்   சார்ந்து இருக்க  வேண்டும். செத்து போன  கொள்கைகளில் இருந்து வர கூடாது.சில சமயம் புரிதல் அதிகம் உள்ளவனை கொள்கை வாதி என  நினைத்து கொள்கிறார்கள்.[தனி காட்டு ராஜாவுக்கும் கொள்கைக்கும் உள்ள சம்பந்தம் சூப்பர் ஸ்டார்க்கும் டான்ஸ்-க்கும்  உள்ள சம்பந்தம் போல வெகு தூரம் .]

காதல் என்பது வடிவம் கடந்தது.காதல்  ராதை-கிருஷ்ணன் போல முழுமை பெற்றது.
என்னை கேட்டால்[அது தான் யாருமே கேக்கறதில்லையே] ...கிருஷ்ண ஜெயந்தியை காதலர் தினமாக கொண்டாடலாம் என்று சொல்லுவேன்.
எதோ இளவயதில் தான் காதல் வரும் என்பது போல ஒரு மாயை தற்போது நிலவி வருகிறது.
அமீபா  முதல்   டினோசார் வரை எல்லா உயிருக்கும் எல்லா வயதிலும் காதல் நிலவும் என்று தோன்றுகிறது.உங்களுக்கு என்ன தோன்றுகிறது.[ வேற வேலை நெறைய இருக்கு என்றா ?] 

ஓஷோவின் -கிருஷ்ணா-கிருஷ்ணா - (ஐந்து பாகங்கள்)  புத்தகங்களை  படித்து பாருங்கள் .நன்றாக இருக்கும்....

 
 

        

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

பதிவுலகில் நான்..















பதிவுலகில் நான் என்ற தொடர் பதிவிற்கு அழைத்த வலையுலக  நண்பர் மார்கண்டேயன் -க்கு  .. நன்றி.....நன்றி.....

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

தனி காட்டு ராஜா

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

பெயர் என்பதே பொய் தானே ....உண்மை பெயர் என்று ஏதாவது உண்டா ?

சரி ....விடுங்க ...மகான்,மாக்கன் என   யாருடைய கொள்கை,புண்ணாக்கு எதையும் ஏற்றுக்  கொள்ளாதவன் ,சுய புத்தியின் வழியே செல்பவன்  என்ற அடிப்படையிலும்  என்னுடைய பெயரின் முதல் எழுத்து "கோ" என்பதால்  கோ என்றால் அரசன் அல்லது  ராஜா என்ற பொருளில் எனக்கு நானே  தனி காட்டு ராஜா என பெயரிட்டு கொண்டேன்.

3 .நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

தமிழ் வலைப்பதிவு சென்று ஒரு முறை காலடி எடுத்து  வைத்து பார்த்தேன்."எவன்டா  அறிவு கெட்ட பயல் ...
மானிட்டர் மேல கால வைக்கிறது என்று அலுவலகத்தில் கத்தினார்கள் ...."அது முதல்   தமிழ் வலை பதிவில் காலடி எடுத்து வைப்பதில்லை. 

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
தினமும் காலை ஆறு மணிக்கு ஒவ்வொரு தெருவாக சென்று  "வலைப்பதிவு படிக்கலையா ....வலைப்பதிவு ....தனி காட்டு ராஜா  வலைபதிவு....சூடான ..சுவையான செய்திகளுக்கு......தமிழகத்தின் நம்பர் 1  வலைப்பதிவு " என்று கூவுவேன் .

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

சொந்த விஷயம் என்றால் என் பதின்ப வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.
ஏன் என்றால் நம்ம வலைபதிவு அண்ணன் சுரேந்திரன் எழுதுமாறு  கேட்டு கொண்டார்.
விளைவு என்றால் எனக்கு ஒன்றும் இல்லை ...வேண்டுமானால் பதிவை படித்தவர்களுக்கு தலை வலி வந்து
இருக்கலாம். 

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகத் தான் இதை ஆரம்பித்தேன்.   பதிவின் மூலம் சம்பாதித்து இந்தியாவின்  கடனை அடைத்து  நம் நாட்டை வல்லரசு ஆக்க வேண்டும் என்பது தான் என் நோக்கம்.இது தான் என் பொழுது போக்கு.     

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
இரண்டு. இரண்டுமே தமிழ் தான் .நான் எல்லாம் இங்கிலீஷ் -ல எழுத ஆரம்பிச்சா நாடு தாங்காது.
தனி காட்டு ராஜா
யுக கோபிகாவின் எண்ணங்கள்

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன் ?

இயல்பாகவே சமுகத்தின் மீது  இருக்கும் கோபம் தான் சில பதிவுகளில்  பின்னுட்டமாக வெளி படும்.
மற்ற படி தனி பட்ட கோபம் ,பொறாமை என்று  எதுவும் கிடையாது.
முக்கியமாக பெண்கள் பதிவு என்றால் ஓடிப்  போய் பின்னூட்டம் இடும் வலை பதிவர்களை கண்டு ஆரம்பத்தில் எரிச்சல் பட்ட துண்டு.
சிலர் அருமை என்று பின்னுட்டம் போட்டு விட்டு தான் பதிவையே படிப்பார்களோ என்று சந்தேகம் கூட   உள்ளது. [இது யுக கோபிகா என்னிடம் சொன்னது ]
இதே ஆண்கள் புதுப் பதிவு ஆரம்பித்தால் ....இம்....ஒரு பின்னுட்டம் கூட தேறாது. 
 
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

அகம் புறம் வலை பதிவர் சுரேந்திரன் அவர்கள்.
அவரைப் பற்றி- நல்லவரு ,வல்லவரு ,நாலுந் தெரிஞ்சவர் ......[5,6 தெரியாதவர்] 
அந்த பாராட்டை பற்றி -தெரியாத்தனமா  பாராட்டிவிட்டார் என்று நெனைக்கிறேன். 

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

என்னை பத்தியா....?
ம்.....வல்லவனுக்கு வல்லவன்  ...முரட்டு காளை...போக்கிரி ராஜா ...
ம்..... நான் ரொம்ப சீரியசான ஆளு .....ரொம்ப கண்டிப்பானவன் .....
ம் ...அப்புறம் ....நான்  Straight forward.... backward....left...right..reverse.....
மேல சொன்னதெல்லாம் வில்லன் களுக்கு .....
மற்ற படி நான் "நாட்டுக்கு ஒரு  நல்லவன்" குழந்தை மற்றும் பெண்களுக்கு!!!

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

தனி காட்டு ராஜா-யுக கோபிகா
















பிச்சை கேட்டவனுக்கு
பிச்சைகாரன் என்றொரு பிம்பம்
பிச்சை போட்ட கெளரவ  பிச்சைகாரனுக்கு
மேலதிகாரி என்றொரு பிம்பம்

எதிர்பார்த்த பிம்பம் கிடைத்த போது  'காதல்'
அந்த பிம்பம் உடைந்த போது 'மோதல் '

வியபாரி பிம்பத்திற்கு போட்டியாக
கணவன் என்ற பிம்பம்
மனைவி என்ற பிம்பம்

நல்லவன் என்ற பிம்பம்
கெட்டவன் என்ற பிம்பம்
பிரபலப் பதிவர் பிம்பம்
புதுப்  பதிவர்  பிம்பம்


காதலன்,காமுகன்
காதலி ,கள்ளக் காதலி 
மகாத்மா ,பாவாத்மா
யோகி ,போகி
அமைதியானவன் ,ஆணவக்காரன் 
மனைவி ,விபச்சாரி
உலக அழகி ,உள்ளூர் கெளவி
இளைய தளபதி ,முத்துன தளபதி
வேலாயுதம்,வெத்து ஆயுதம் 
தல ,தறு தல
தனி காட்டு ராஜா,புள்ளி ராஜா
கோபாலன் ,கோழி திருடன்
கிருஷ்ணன்,கிறுக்கன்
நரசிம்ம பிரபு ,நெருப்பு நீல மேகம் 
சங்கர பாண்டியன் ,சரக்கு பாண்டியன் 
சுரேந்திரன்,டி.பி .கஜேந்திரன்
சித்தூர் முருகேசன் ,சிங்காநல்லூர் ஆறுமுகம்
சங்கீதா ,ரீட்டா
ராதை ,பேதை
யுக கோபிகா ,கேரளா கோபிகா
தங்கமணி ,ரங்கமணி 
சுனைனா,நமீதா
சூப்பர் பிகர் ,மொக்கை பிகர்
டி.ராஜேந்திரன் ,காபி கடை ராமச்சந்திரன்
பரிசல் ஒட்டி,பஞ்சு அருணாச்சலம்
ஒயர் மேன் சங்கர், ஒன்னாம் நம்பர் வீட்டு சின்ராசு 
ஈரோடு கதிர்வேலு ,தார்ரோடு  தங்கவேலு
வால் பையன் ,சமர்த்துப்  பையன் 
கேப்டன் ,கேன குப்பன்
சாப்ட்வேர் இஞ்சினியர், சாப்பாட்டு   ராமன்
மளிகைகடைக்காரன் ,மாடமாளிகைகாரன் 
சென்னை வாசி ,கோயமுத்தூர் வாசி
சிங்கப்பூர் சிங்காரம் ,சீவலப்பேரி  பாண்டி 
நாத்திகன் ,ஆத்திகன்
பிராமணன் ,சூத்திரன்
கவுண்டர் ,முதலியார்
தமிழன் ,தெலுங்கன் 
பில் கேட்ஸ்,பீலா கேஸ்
இயேசு ,பாஸு
அல்லா ,பில்லா
சிவன்,சரவண பவன்
பிரமச்சாரி ,நித்தியானந்தன்
போலீஸ் ,திருடன்
ஆசிரியர் ,கொள்ளைக்காரன்
விஞ்ஞானி ,கோமாளி

சமுகத்தில்  எங்கும் பிம்பம்
எதிலும் பிம்பம் 

தன் பிம்பத்தை பார்த்து பயம்
வரும் போது கடவுள் பிம்பம் ஆறுதல் ..

பிம்பத்தை உள்வாங்கி பார்த்தேன்
உண்மை பிம்பத்தில் இல்லை ..
பிம்பம் உண்மை இல்லை ..

மனமே .....
நல்ல  பிம்பங்களில் வாழ   பழகிவிடு ...
உயிரை  உணர வேண்டுமெனில்
பிம்பத்தை  கடந்து போகவும் கற்று விடு ...




முன் பின் முரணான குறிப்பு : 
ஹலோ பாஸ் .....எங்க போறீங்க ......வோட் எல்லாம் போடாதீங்க ....எனக்கு தான் இந்த பிரபல பதிவர் பிம்பம் எல்லாம் பிடிக்காதுன்னு  சொல்லிட்டேனே...

அப்புறம் ஒரு நாளைக்கு இந்த கவிதை(!?) எல்லாம் சரித்திரத்தில வரும் ....எனக்கு சிலை வைப்பாங்க .....இதெல்லாம் எனக்கு பிடிக்காது ...ஆமா சொல்லிபுட்டேன் .....

வலை யுலக பெருங்குடி மக்களே ...உங்களுக்கு ஒரு முக்கியமில்லாத அறிவிப்பு  :

 பெரும் மதிப்புக்கும்,மரியாதைக்கும்  உரிய   தனி காட்டு ராஜா(தம்பி ...நீ எந்த காட்டுக்கு ராஜா என்பன  போன்ற கேள்விகள்  கேப்போர் மீது குட்டி சாத்தான்  ஏவி விடப்படும் -எச்சரிக்கை )  அவர்கள் யுக கோபிகா -வின் எண்ணங்கள் என்ற பெயரில் ஒரு ப்ளாக் எழுதினார் (அட ....பொறுக்கி பயலே .. என முனு முனுப்பவர் களுக்கு  வேலாயுதம் பட டிக்கெட் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் )....

நீங்கள் ஏன் இந்த மாதிரி  ஒரு பெண் பெயரில் ஒரு ப்ளாக் எழுத ஆரம்பித்தீர்கள்  என்று அவரை யாருமே  கேக்காத காரணத்தால் அவராகவே  பின் வருமாறு  உளறுகிறார் ....

தனி காட்டு ராஜா அவர்கள் முதலில் ப்ளாக் -கில் கவிதை என்ற பெயரில் கிறுக்கி கொண்டு இருந்தார் .ஒரு பின்னுட்டம் கூட வராததால் விஜய் படம் பார்த்து விட்டு  தியேட்டரய் விட்டு வெளியே  வரும் போது ஒரு விவரிக்க முடியாத உணர்வு வருமே ...அது போன்ற ஒரு உணர்வை அடைந்தார்....


ஒரு பெண் அவர்கள்  மூன்று  வரியில்  'முரண்'  என்று கவிதை எழுதி இருந்தார்கள் [தம்பி ....அவுங்க கவிதை நல்லா இருந்திருக்கும்  என்று சொல்லுபவர்கள் கடத்தி வரப்பட்டு ...ஒரு நாள் முழுவதும்  T.V  இல் விளம்பரம் மட்டும்  பார்க்குமாறு செய்து  சொன்னதை வாபஸ் பெருமாறு  வற்புறுத்த படுவர் .............எனக்கு தமிழ் -ல  புடிக்காத வார்த்தை உண்மை.....] 
அட.... அதற்கு 20  பின்னுட்டம்......

தனி காட்டு ராஜா   அரசவையை  கூட்டினார்(என்ன ....துடப்பத்துலையா தம்பி? ).சிப்பாய்களுடன்  ஆலோசனை செய்தார்.சோதனை முயற்சியாக கோபிகா உருவானாள்...........

கோபிகா-விற்கு நல்ல வரவேற்பு  தனி காட்டு ராஜா  எதிர் பார்த்தது போலவே......

சமுகத்தில்  எங்கும் பிம்பம்
எதிலும் பிம்பம்  

என்ற உண்மையை உணர்ந்தார் ......தெளிந்தார் ............அந்தப்புரத்தில்   ஞானோதயம் பெற்றார் .......


ஒரு முக்கிய அறிவிப்பு ....சொல்லுபவர் முக்கிய மில்லாத  தனி காட்டு ராஜா

யுக கோபிகாவை  பின்வருமாறு விமர்சனம் செய்து பின்னுட்டம் இட்ட அண்ணன்  "அகம் புறம் " சுரேந்தரன்  அவர்கள் வாழ் வாங்கு  வாழுமாறு  வாழ்த்தி .....இனிமேல் பஸ் -இல் செல்லும் போது டிக்கெட் எடுத்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்  கொள்ளு மாறு வேண்டி  விரும்பி கேட்டு கொள்ளப் படுகிறார்கள் ......

////ரசித்தேன்.. சில கவிதைகள் புரட்சிகரமான சிந்தனைகைளை தாங்கிவந்ததால் இன்று முதல் நீங்கள் புரட்சி தலைவி என்றழைக்கப்படுவீர்கள். இந்த பட்டத்தில் வேறு யாராவது இருப்பாராயின் நீங்கள் இளைய புரட்சி தலைவி என்றழைக்கபடுவீர்கள்... (ஆட்டோவெல்லாம் வேண்டாங்க.. நீங்க யுவகிருஷ்ணாவை அனுப்பிச்சாலே போதும்...)////


யுக கோபிகா -வின் எண்ணங்கள்   -இல் followers  எல்லாம்  பெண்மையை மதிப்பவர்கள் என்று எடுத்து கொள்ளப் படுகிறது......

 எல்லா பதிவிலும் பின்னுட்டமிட்டு  ஊக்குவித்த  LK அவர்கள் பெண்ணியம் போற்றுபவர் என்று பாராட்ட படுகிறார் ....
[தல , அநியாத்துக்கு நல்லவனா இருந்து தனி காட்டு   ராஜா வோட இரண்டு  பதிவ remove  பண்ண வச்சுடிங்கலே......]

 கிண்டி கத்திபார சந்திப்பில்   நேரு சிலைக்கு அருகில்  தனி காட்டு ராஜா -வுக்கு  சிலை  ஒன்று  சிரசாசன நிலையில்(பெண்மையை போற்றி  வழிபடுபவர்  என்பதால் )  வைக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப் படுகிறது ...... ......


சரி அதெல்லாம் விடுங்க ........இந்தமாதிரி வேஷம் போட்ட தனி காட்டு ராஜாவுக்கு  உங்கள் கடுமையான  கண்டனங்கள்.....அல்லது லேசான கண்டனங்கள்  அல்லது மிக லேசான கண்டனங்களை  தெரிவித்து விடுங்கள்.....

கடுமையான கண்டனம் போதாது ...தண்டனை தந்தே ஆக வேண்டும்  என்று விரும்புவோர்  கிழ்க்கண்ட தண்டனைகளில்  ஒன்றை பரிந்துரை  செய்யலாம் ...


1.தன்னை தானே  தனி காட்டு ராஜா  என்று கூறி கொல்வதால்  காட்டுக்கு சென்று  தனி காட்டு ராணி யான  பெண் சிங்கத்தை "கிச்சு கிச்சு " மூட்டி சிரிக்குமாறு  செய்ய வேண்டும் .

2. காட்டில் புலியை  பார்த்து  அதன் முகத்துக்கு  நேராக  முகம் பார்க்கும் கண்ணாடியை  காட்டி  "புலிக்கு   பிறந்தது  பூனையாகுமா? " என்று ஒரு கேள்வியை  கேக்க வேண்டும் .

3.சிம்பு -வின்  அனைத்து பஞ்ச் டைலாக் -கையும்  ஜெர்மன்  மொழியில்   மொழி பெயர்த்து  கண்டனம் தெரிவிக்கும்  வலை பதிவர்களுக்கு  அனுப்பி வைக்க வேண்டும் .

4.கொசு ஒன்றை உயிருடன்  பிடித்து  அதன் காதில்  " நான் ஒரு பிரபலமில்லாத வலை பதிவர் ...எனது பெயர் அரை குறை விகடனில்  வந்துள்ளது " என்று 1008  முறை  கூற வேண்டும் ....ஒரு வேலை கொசு இறந்து விட்டால்  மீண்டும்   வேறு ஒரு கொசுவை   உயிருடன்  பிடித்து முதலில்  இருந்து  சொல்ல வேண்டும் .

5.கேபிள் சுதாகர் என்ற பிரபலமில்லாத  வலை பதிவரின் கேபிளை  திருடி வந்து வீட்டில் ஒளித்து வைத்து கொள்ள வேண்டும் .அவர் விவரம் தெரிந்துகேட்டால் கூட கேபிளை கொடுத்து விட கூடாது .

6.தமிழ்  வலையுலக குடும்பத்தின் பாமிலி சாங்  ஒன்றை தாயார் செய்து  அதை அனைத்து தமிழ் வலை யுலக குடும்பத்துக்கு  அனுப்பி வைக்க வேண்டும் . இதன் மூலாம் ஏர்போர்ட் ,ரயில்வே ஸ்டேஷன்  போன்றவற்றில்  நீங்கள்  பாமிலி சாங் பாடுவதன் மூலம் அனைவரும்  ஓன்று சேர்ந்து கொள்ளலாம் .

7.கடவுள் இருக்கிரார இல்லையா  என்று எதாவது ஒரு மன நல காப்பாகத்துக்கு சென்று விவாதம் செய்ய வேண்டும் .விவாதத்தில்  வெற்றி பெற்றால்  முடிவான விளக்கத்தை  அனைத்து வலை பதிவர் மற்றும் கடவுளுக்கு அனுப்பி வைக்கவும் . தோற்று விட்டால்  மன நல காப்பாகத்தில் தானும் ஒரு அங்கமாக சேர்ந்து விடவும் .....


-தனி காட்டு ராஜா (எ) கோபி