புதன், 7 ஜூலை, 2010

இருட்டுக் கலாச்சாரம்.....














பர்சில் பணம் எவ்வளவு
வைத்திருக்கிறாய் என்று கேட்டாள்...
அவள் விபச்சாரி...
உங்களுக்கு சம்பளம் எவ்வளவு
என்று கேட்டாள்..
அவள் மனைவி..
உன்னால் என்னை வாழ வைக்க
முடியுமா என்று கேட்டாள்
அவள் காதலி...
உடல் அழகாக இருக்கிறதா
என்று பார்த்தான்..
அவன் விபச்சாரன் அல்லது பெயர் வைக்கப்படவில்லை
உடல் அழகுடன் வேலைக்கு
செல்கிறாளா என்று பார்த்தான்
அவன் கணவன்...
எதையும் அனுபவிக்காமல்...
பர்சில் உள்ள பணத்தை கரைக்கும்
முட்டாளின் பெயர் காதலன்...
விபச்சாரியையும் விபச்சாரனயும்  காரி உமிழ்ந்து
அனைவரும் உயர்ந்தவர்கள் ஆனார்கள்.. 
நமது இந்திய இருட்டு  கலாச்சாரத்தில் ..

4 கருத்துகள்: